மோடியால் மட்டுமே நிலையான ஆட்சி வழங்க முடியும்: பாபா ராம்தேவ்
புதுடெல்லி: மோடியால் மட்டுமே நிலையான ஆட்சியை வழங்க முடியும் என சமூக ஆர்வலரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு தியாகி அந்தஸ்து வழங்கக் கோரியும், யோகக்கலையை வளர்த்தல் மற்றும் பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீக அறிவையும் வலியுறுத்தி புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இதில் பங்கேற்றால் அவர்களையும் வரவேற்போம்.
காங்கிரஸ் ஏற்கனவே, அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் சென்று கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் நிலையான மற்றும் நேர்மையான ஆட்சியை நரேந்திர மோடியால் மட்டுமே வழங்க முடியும். மோடிக்கு எதிராக பல தீய சக்திகள் உருவாகி, அவர் பிரதமராவதை தடுக்க இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றன. நேரம் வரும்போது அவைகள் தோற்கடிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு தியாகி அந்தஸ்து வழங்கக் கோரியும், யோகக்கலையை வளர்த்தல் மற்றும் பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீக அறிவையும் வலியுறுத்தி புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இதில் பங்கேற்றால் அவர்களையும் வரவேற்போம்.
காங்கிரஸ் ஏற்கனவே, அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் சென்று கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் நிலையான மற்றும் நேர்மையான ஆட்சியை நரேந்திர மோடியால் மட்டுமே வழங்க முடியும். மோடிக்கு எதிராக பல தீய சக்திகள் உருவாகி, அவர் பிரதமராவதை தடுக்க இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றன. நேரம் வரும்போது அவைகள் தோற்கடிக்கப்படும் என்றார்.
0 comments:
Post a Comment