கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் நான்காமிடம் பெற்று சாதனை.
வட்டார அளவில் தொடர்ந்து முதலிடம்.
வட்டார அளவில் தொடர்ந்து முதலிடம்.
நம்பியூர்
அருகே உள்ள ,வெட்டையம்பாளையம் கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் நா ன்காமிடமும்,மாவட்ட அளவில் மூன்றாமிடமும்,வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு
மாவட்டம்,நம்பியூர் அருகே வெட்டையம்பாளையத்தில் உள்ள கொமரசாமிக்கவுண்டர்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ரம்யா 496 மதிப்பெண்கள் பெற்று
மாநில அளவில் நான்காமிடமும்,மா வட்ட அளவில் மூன்றாமிடமும்,பள்ளியில் முதலிடமும் பெற்றுள்ளார்.மதிப்பெண்கள் விபரம்;தமிழ்-99,ஆங்கிலம்-98, கணி
தம்-99,அறிவியல்-100,சமூக அறிவியல்-100.ஜி.எம்.தரணி 493 மதிப்பெண்கள்
பெற்று 2 ஆம் இடமும்,வி.வித்யா 491 மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடமும்
பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும், நம்பியூர் வட்டார அளவில் கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு மதிப்பெண்களில் 490 க்கு மேல் 5 பேரும்,480 க்கு மேல் 15
பேரும்,470 க்கு மேல் 25 பேரும்,460 க்கு மேல் 31 பெரும்,450 க்கு மேல் 35
பேரும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும்,மூன்று
பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று ஒருவரும்,இரண்டு பாடங்களில்
100க்கு 100 மதிப்பெண் பெற்று 11 பேரும்,ஒரு பாடத்தில் 100க்கு 100
மதிப்பெண் பெற்று 20 பேரும் சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை,ஆசிரியர்களையும் பள்ளியின்
நிறுவனத்தலைவர் வி.கே.சின்னச்சாமி பாராட்டி பரிசுகள் வழங்கினார். பள்ளி
தாளாளர் உமா சிவக்குமார்,செயலாளர் சிவக்குமார்,மேலாண்மை அறங்காவலர்
கமலம்சின்னச்சாமி,முதல்வர் வனிதாமணி,தலைமை ஆசிரியை பரமேஸ்வரி மற்றும்
ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந் து கொண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.