காரமடை ஒன்றியத்தில் அண்ணா தி.மு.க.முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்.அமைப்பு
செயலாளர் ஏ..கே.செல்வராஜ் ,ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ,துவக்கி வைத்தனர்..
மேட்டுப்பாளையம்.மார்ச்.25.நீ லகிரி பாராளுமன்ற
தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து
மேட்டுப்பாளையம் தொகுதி,காரமடை ஒன்றிய பகுதிகளில் முதல் கட்ட பிரச்சாரம்
துவங்கியது.காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி,தலைமை
தாங்கினார்.மேட்டுப்பாளையம் தொ குதி செயலாளர் எம்.எஸ்.ராஜகுமார், மாவட்ட
ஊராட்சி துணைத்தலைவர் சா.ஞானசகரன், தொகுதி இணை செயலாளர் பூபதி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.அண்ணா தி.மு.க.அமைப்பு செயலாளர்
ஏ.கே.செல்வராஜ், ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, ஆகியோர் காரமடை ஒன்றியத்தில் 50
க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து இரட்டை
இலைக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தனர். பிரசாரத்தில் மாவட்ட விவசாய
அணி செயலாளர் கிருஷ்ணசாமி,மாவட்ட கவுன்சிலர் பி.டி.சிவசாமி,ஒன்றிய
பொருளாளர் தங்கராஜ், காரமடை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர்
ஆர்.செல்வராஜ்,சிக்காரம் பாளையம் ஊராட்சி தலைவர் பார்வதி
மாறன், துணைத்தலைவர் எஸ்.பழனிசாமி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment