மேட்டுப்பாளையம் சங்கர் நகர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் 47 ஆம் ஆண்டுவிழா
பறவைக்காவடியில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்.
பறவைக்காவடியில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்.
மேட்டுப்பாளையம்.மார்ச்.19.மேட் டுப்பாளையம்
அருகே உள்ள சங்கர் நகர் அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்,ஸ்ரீ சக்தி
விநாயகர் கோவில்களின் 47 ஆம் ஆண்டு திருவிழா,கடந்த 3 ந்தேதி பொரிசாட்டுடன்
துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது.கம்பம் நடுதல்,அம்மன் அழைப்பு,அம்மன்
ஊர்வலம்,ஆகிய நிகழ்சிகள் நடந்தது.இன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம்
பேருந்து நிலையம் சக்திவினாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு
குத்திக்கொண்டு பறவை காவடியில் தொங்கியபடி சங்கர் நகர் கோவில்
வரை ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று மாலை 6 மணிக்கு
மாவிளக்கு நிகழ்ச்சியும்,நாளை மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.21 ந்தேதி
அன்னதானமும்,24 ந்தேதி மறுபூஜையும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை
கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொது மக்கள்,இளைஞர்கள் சிறப்பாக
செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment