அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சரவணன் பிரச்சாரம்
சத்தி, மார்ச்.31.
நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து சத்தியை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் நடிகர் சரவணன் பிரச்சாரம் மேற்கொண்டார். சரவணன் பேசியதாவது. திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மது அருந்திவிட்டு பிரச்சாரம் செய்கிறார். முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் தமி£கத்தின் தேவையான திட்டங்களை நாமே நிறைவேற்றிக் கொள்ளலாம். அதிமுக கட்சி வேட்பாளர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி மக்களுக்கு உடனடியாக செயல்படுவார்கள். இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் உரிமையுடன் மத்திய அரசிடம் மின்தேவைகளை கேட்டுப் பெறமுடியும். அதிமுக வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார். இப்பிரச்சாரத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து சத்தியை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் நடிகர் சரவணன் பிரச்சாரம் மேற்கொண்டார். சரவணன் பேசியதாவது. திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மது அருந்திவிட்டு பிரச்சாரம் செய்கிறார். முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் தமி£கத்தின் தேவையான திட்டங்களை நாமே நிறைவேற்றிக் கொள்ளலாம். அதிமுக கட்சி வேட்பாளர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.
தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி மக்களுக்கு உடனடியாக செயல்படுவார்கள். இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் உரிமையுடன் மத்திய அரசிடம் மின்தேவைகளை கேட்டுப் பெறமுடியும். அதிமுக வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார். இப்பிரச்சாரத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment