மேட்டுப்பாளையம் அரிமா சங்க புதிய தலைவராக எஸ்.ஜெயக்குமார் பதவி ஏற்பு.
ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் பங்கேற்பு.
மேட்டுப்பாளையம்.ஜூன்.26.மேட்டு ப்பாளையம்
அரிமா சங்க புதிய தலைவராக எல்.ஐ.சி.ஜெயக்குமார்
பதவியேற்றார்.மேட்டுப்பாளையம் அரிமா சங்கத்தின் 2014-2015 ஆம் ஆண்டிற்கான
புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மேட்டுப்பாளையம் ராமு கவுடர்
மண்டபத்தில் நேற்று நடந்தது.தலைவர் ஆர்.சீனிவாசன் வரவேற்று
பேசினார்.செயலாளர் பி.எஸ்.யு.ஞானமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.அரிமா சங்க
முதல் துணை ஆளுநர் ஆர்.தங்கப்பழம் புதிய உறுப்பினர்களை அறிமுகம்
செய்துவைத்தார்.முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.நாகின் ,இந்த ஆண்டு புதிய
நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.புதிய தலைவராக
எஸ்.ஜெயக்குமார், செயலாளராக தீன் முகமது,பொருளாளராக டி.ரோஜர் ,மற்றும்
துணைத் தலைவர்களாக ஆர்.கிருஷ்ணன்,அப்துல்கரீம்,எஸ் .ஆனந்தன், துனைசெயலாளராக கே.செல்வக்குமார்,மற்றும் நிர்வாகிகளாக ராஜரத்தினம், எம்.தர்மராஜ்,அப்பா ஸ் அலி,அபூபக்கர்,ஆரியநாதன் காத்தான், சித்திரவேலு,பிஷப் தங்கப்பன்,எஸ்.ஆர்.சி.தங்கவேலு, எம்.ஆர்.உதயகுமார், கமிட்டி உறுப்பினர்கள் பி.என்.ஆர்.ராஜேந்திரன், எம். ரஹமதுல்லா, எஸ்.ஆர்.சுப்பையன் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
விழாவில் கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை
நிறுவனரும்,செந்தில் குரூப் நிறுவனங்களின் தலைவருமான ஓ.ஆறுமுகசாமி
கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.அப்போது அவர்
கூறியதாவது; புதியதாக பதவியேற்ற தலைவர் ஜெயக்குமார்
மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரிமா சங்க
புதிய நிர்வாகிகளில் தலைவர் இந்து,செயலாளர் முஸ்லீம்,பொருளாளர் கிறிஸ்தவர்
.இதுவே மத நல்லினக்கதிற்கு எடுத்துக்காட்டு.அணைத்து மதத்தினரும் நண்பர்கள்
சகோதரர்கள்.மத ஒற்றுமைக்கு இது ஒரு உதாரணம்.சேவை செய்வதில் ஜாதி மதம்
இல்லை.அதை அரிமா சங்கத்தில் காணமுடிகிறது.அதற்க்கு எனது
வாழ்த்துக்கள்.இதுபோன்ற சமுதாய அக்கறை உள்ள அமைப்புகள் பல்வேறு சேவைகளை
வழங்கி வருகிறது பாராட்டுக்குரியது.,கோவை அரசு மருத்துவமனையை ஸ்ரீ
விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை ஏற்று சுமார் ரூ.ஒருகோடி
செலவில் சுகாதாரம்,மற்றும் மருத்துவமனை உபகரணங்கள்
வழங்கியுள்ளோம்.அதேபோல் மேட்டு ப்பாளையம் அரசு மருத்துவமனையை தனியார்
மருத்துவமனைக்கு இணையாக சுத்தம் சுகாதாரம் மற்றும் சிகிச்சை கருவிகள்
வழங்கி சிறப்பாக சேவை செய்ய அரிமா சங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.அதற்க்கு எங்களது
ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை முழு ஒத்துழைப்பு வழங்கும் என
தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் ஓய்வுபெற்ற
சி.பி.ஐ.போலீஸ் டி.எஸ்.பி.ஆர்.வெள்ளிங்கிரி, இரண்டாவது துணை ஆளுநர்
விஜயகுமார்,ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.விழாவில் ரூ.ஒரு
லட்சம்மதிப்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் நடத்துனர்
சங்கத்திற்கு சாலைவிதிகள் ,விபத்துகள் தடுப்பது குறித்து எல்.சி.டி
புரஜெக்டர், பாலமலை ஆதிவாசிகளுக்கு கம்பளி,பள்ளி மாணவர்களுக்கு இலவச
நோட்டுப்புதககங்கள் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.விழா நிகழ்சிகளை
முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் பி.நவ்ரத்தன் மல்,எம்.வின்சென்ட்
வேதராஜ், ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.. முடிவில் பொருளாளர் ரோஜர்
நன்றிகூறினார்.