தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, March 16, 2014

மேட்டுப்பாளையம் தொகுதி அண்ணா தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்.
 
வேட்பாளர் சி..கோபாலகிருஷ்ணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய கடுமையாக உழைக்க ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, வேண்டுகோள்.



மேட்டுப்பாளையம்.மார்ச்.16.மேட்டுப்பாளையம் தொகுதி அண்ணா தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் நடந்தது.,,நீலகிரி தொகுதி பொறுப்பாளர் மற்றும் அமைப்பு  செயலாளர் ஏ.கே.செல்வராஜ்அர்ஜுனன் எம்.பி,முன்னாள் அமைச்சர் மில்லர் ,நீலகிரி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மேட்டுப்பாளையம் தொகுதி செயலாளர் எம்.எஸ்.ராஜகுமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ஏ.வான்மதி சேட்,வரவேற்று பேசினார்..சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்,ஆகியோர் கலந்துகொண்டு தேர்தலில் செயல்வீரர்கள் எப்படி செயல்படவேண்டும் என ஆலோசனை வழங்கினார்கள்.மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ,ஓ.கே.சின்னராஜ்  பேசும்போது,தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாரத பிரதமராக்க 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அனைவரும் அயராது பாடுபடவேண்டும். நீலகிரி தொகுதியில் அதிக ஓட்டுகள் பெற்றுத்தந்து நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் வெற்றிக்கு பாடுபடவேண்டும்.மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுதந்து  பெருமை சேர்க்கவேண்டும்.அண்ணா தி.மு.க.அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கவேண்டும். வெற்றிக்கனியை முதல்வர் காலடியில் சமர்ப்பிக்க அனைவரும் ஒற்றுமையுடன்,கடுமையாக உழைக்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

Post a Comment