தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, March 22, 2014

சத்தி மலைக்கிராமங்களில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்குசேகரிப்பு
 





 
சத்தியமங்கலம், மார்ச் 22:
நீலகிரி மக்களவை தொகுதியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். 

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குகளில் மூன்றில் 2 பங்கு வாக்குகள் தாளவாடி,கடம்பூர் மலைப்பகுதியில் உள்ளன. அதிக வாக்காளர்களை கொண்ட  இக்கிராமங்களில் திமுக வேட்பாளர் ஆ.ராசா தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தை துவக்கினார்.

தாளவாடி பஸ்நிலையம், அரேப்பாளையம், கேர்மாளம்,சுஜில்கரை, கடம்பூர் மற்றும் கே.என்.பாளையம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்து ராசா பேசியது:

மலைப்பகுதியில் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் அடிப்படைத் திட்டங்களை நிறைவேற்ற இயலாது. இப்பகுதிகளில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு நிதியில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. கேர்மாளம், கே.என்.பாளையத்தில் செயல்பட்ட வனச்சோதனைச்சாவடியால் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.மாலை 6 மணிக்கு மேல் விவசாய பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 
 
கடந்த முறை நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றவுடன் மலைவாழ் மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்த வனச்சோதனை சாவடியை நீங்கினேன். மக்கள் 24 மணி நேரமும் சுதந்திரமாக சென்றுவருகிறார்கள் என்றால் அதற்கு திமுக அரசு தான் காரணம்.

கடம்பூரில் இருந்து குன்றிக்கு தார்சாலை அமைக்க நான் முதலில் திட்டஅறிக்கையை தாக்கல் செய்தேன். அதன்பிறகே டெண்டர் விடப்பட்டு தார்சாலை அமைக்கப்பட்டு்ள்ளது. தமிழக முழுவதும் திமுக வேட்பாளர்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியில் மதசார்பற்ற அரசு அமையவும், அதன் மூலம் நல்ல திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்த  கடந்த முறை போன்று இம்முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். 







பிரசார பயணத்தில் நீலகிரி மக்களவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எல்.பி.தர்மலிங்கம், சத்தி நகர செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் என்.சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ டி.கே.சுப்பிரமணியம், அரியப்பம்பாளையம் பேரூர் செயலாளர் இளங்கோ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..

0 comments:

Post a Comment