சத்தி அருகே மரத்தில் பறித்து நாவல்பழம் விற்பனை அமோகம்
சத்தியமங்கலம்,ஜூலை 25:
நாவல்
பழம் சீசன் துவங்கியுள்ளதால் சத்தி பகுதியில் நாவல்பழம் விற்பனை அமோகமாக
உள்ளது. மரத்தில் இருந்து பழங்களை பறித்து விற்கப்படுவதால் மக்கள்
ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
சத்தியமங்கலம்
வட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்களது
தோட்டங்களில் மா, கொய்யா, பலா,வேம்பு,புளியன் உள்ளிட்ட பல்வேறு மரங்களை
வளர்க்கின்றனர். அதில் குறிப்பிட்ட விவசாயிகள் நாவல் பழமரங்களை
வளர்க்கின்றனர். சத்தி,பவானிசாகர், கெஞ்சனூர் ஆகிய இடங்களில் நாவல் மரங்கள்
அதிகம் உள்ளன. இதன் பருவ காலம் மே முதல் ஜூலை வரை ஆகும்.
வர்த்தகத்தில்
மதிப்பு மிக்க பழம் நாவம் பழ மரத்தின் உயரம் 35 அடி வரை இருக்கும். மரம்
நடவு செய்த காலத்தில் இருந்து 10 ஆவது ஆண்டு காய்பிடிக்க துவங்கும். வெப்ப
மண்டல பகுதியில் அனைத்து மண் வளங்களிலும் வளருக்கூடிய நாவல் மரம்
தோட்டங்களில் மர நிழலுக்காவும் காற்றை தாங்கிபிடிக்கும் தடுப்பாகவும்
விவசாயிகள் வளர்க்கின்றனர்.
பூ மற்றும் காய்
பிடித்து வளர்ச்சியடைய 60 நாள்கள் தேவைப்படும். அறுவடை செய்யும்போது மழை
பொழிவு இருப்பதால் காய் நல்ல ஊதா நிறத்தில் சுவையுடன் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மருந்தான நாவல் பழமரத்தில் தினந்தோறும் 5
கிலோ பழம் மகசூல் கிடைக்கிறது. சத்தியில் உள்ள விவசாயி தோட்டத்தில் நாவல்
மரத்தில் இருந்து பறித்து உடனே விற்பனை செய்வதால் பழம் அமோக
விற்பனையாகிறது. இது கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
பறிக்கும்போது பழங்கள் கீழே விழந்து மண்ணில் சேதமடையாமல் இருக்கு பிளாஸ்டிக் விரிப்பு மூலம் அதனை பாதுகாக்கின்றனர்.
இரசாயண
கலவையின்றி இயற்கையான முறையில் சுவைமிக்க இந்த நாவல் பழம் கிடைப்பதால்
வெளியூர் சுற்றுலாபயணிகள் இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர்.