புன்செய்புளியம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்; வருவாய் துறை சார்பில் நடைபெற்றது.
நிகழ்சியில்,கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் சமுகநல அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும் ,பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
புன்செய் புளியம்பட்டி;மார்ச்;27;
புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் அருகில்
வாக்களர்களுக்கு வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில்
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி
பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக,
சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் உத்தரவின் பேரில்,வருவாய் துறை
சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்,கோவை-சத்தி சாலையில்
புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,கிராம நிர்வாக அலுவலர் ஜி.கே.கோபாலகிருஷ்ணன் தலைமை
தாங்கினர்.வருவாய் ஆய்வாளர் எஸ்.தங்கவேல், கிராம நிர்வாக அலுவலர்
சுப்பிரமணி,தங்கமணி, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராம நிர்வாக
அலுவலர் ஜி.கே.கோபாலகிருஷ்ணன் பேசும்போது;வாக்களிப்பது ஜனநாயக
கடமை,பொதுமக்களாகிய நாம் அனைவரும் நமது வாக்குகளை தவறாமல் பதிவு
செய்யவேண்டும்.என தெரிவித்தார். மேலும்,நோட்டுக்கு வேண்டாம்
ஓட்டு,ஜனநாயகம் காத்திட அனைவரும் வாக்களிப்போம், மனதில் உறுதி
வேண்டும்,மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை
ஒலிபெருக்கியில் அறிவித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்சியில்,கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் சமுகநல அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும் ,பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment