20 ஓவர் கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
மிர்பூர்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 8
விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.
வங்கதேசத்தின் மிர்பூரில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை முதலில்
பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7
விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என
களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள்
எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி அரைசதம் அடித்தனர். இந்த
வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய
அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
0 comments:
Post a Comment