தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 26, 2014

புன்செய்புளியம்பட்டி சருகுமாரியம்மன் கோவில் திருவிழா;.பூச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.



புன்செய் புளியம்பட்டி;மார்ச்;26;
புன்செய் புளியம்பட்டி சருகுமாரியம்மன் கோவில் திருவிழாவில்  பக்தர்கள் பூச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புன்செய் புளியம்பட்டி  நம்பியூர் சாலையில் அமைந்துள்ளது சருகுமாரியம்மன் கோவில்.ஆண்டுதோறும் பங்குனி மாதம் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டிற்கான கோயில் விழா கடந்த 20 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேல், அம்பு மற்றும் நிறைமனை எடுத்தும் அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.

பின்னர் நேற்று  இரவு 10 மணிக்கு சின்னக்கிணறு பகுதிக்கு  அம்மன் அழைத்து வர கோயிலிருந்து படைக்கலத்துடன் புறப்பட்டனர்.  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் அழைத்து வரப்பட்டது. 12.30 மணிக்கு அம்மன் படைக்கலம் கோவிலை வந்தடைந்தது. கோயில் பூசாரி சுப்பையன் தலைமையில் விழாக்குழுவினர் படைக்கலத்தை வரவேற்றனர்.

  பின்னர்,அதிகாலை சருகுமாரிஅம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து,காலை 10 மணிக்கு பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்,பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வேண்டி பூச்சட்டி எடுத்தனர்.இதனை தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும்,மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நாளை மஞ்சள் நீராட்டு விழாவும்,ஏப்ரல் 1 ஆம் தேதி மறுபூஜை திருவிழாவும் நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment