தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, March 16, 2014

மத்திய அரசில் அ.தி.மு.க., இடம்பெற்றால் தமிழகம் மிளிரும்: ஜெ.,

 


கள்ளக்குறிச்சி:""மத்திய அரசில், அ.தி.மு.க., வலுவான நிலையில் அங்கம் வகித்தால், தமிழகம் மிளிரும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் காமராஜை ஆதரித்து, உலகங்காத்தான் பகுதியில், முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரசாரம் செய்தார்.


அவர் பேசியதாவது:தமிழகத்தின் தேவைகளை, மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளும் காலம் வந்து விட்டது. அதற்கு, வரும் தேர்தலில் உங்கள் ஓட்டுகளை, அ.தி.மு.க.,விற்கு தாருங்கள் என, கேட்க வந்துள்ளேன்.காங்., தலைமையிலான மத்திய அரசில், ஒன்பது ஆண்டுகள், தி.மு.க., அங்கம் வகித்த போதும், தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை-.தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசை வலியுறுத்துவேன் என்கிறார் கருணாநிதி. தமிழர்களை ஏமாளிகளாக கருதும், தி.மு.க.,விற்கு, இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.விலைவாசி உயர்விலிருந்து மக்களை காத்திட, மத்திய அரசின் பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டும். அதற்கு, அ.தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

அனைத்து துறையிலும் ஊழல் புரிந்து வரும், காங்., அரசை தூக்கி எறிய வேண்டும். உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை. அதை வீணாக்காதீர்கள். அ.தி.மு.க., தவிர, வேறு கட்சிகளுக்கு ஓட்டு போட்டால், அது எதற்கும் உதவாது; அவர்களால் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க., வலுவான நிலையில், மத்திய அரசில் அங்கம் வகித்தால், இந்தியா ஒளிரும், தமிழகம் மிளிரும்.நாட்டில், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும். அ.தி.மு.க., வலுவான நிலையில், மத்தியில் அங்கம் வகித்தால், ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும், தமிழக மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழை ஆட்சி மொழியாக்க முடியும். பெட்ரோல் பொருட்களின் விலை ஓராண்டிற்கு நிலையாக இருக்கும்.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

 

0 comments:

Post a Comment