புதுச்சேரி: என்.ஆர்.,காங்கிரசால் புதுச்சேரி மக்களுக்கு எவ்வித நன்மையும்
கிடைக்கவில்லை என அ.தி.மு.,க பொதுசெயலர் ஜெ., இன்று ( 27 ம் தேதி
வியாழக்கிழமை ) பிரசாரம் செய்தார். அவர் அங்கு வேட்பாளர் ஓமலிங்கத்திற்கு
ஆதரவு கேட்டு பேசுகையில், இங்குள்ள என்.ஆர்.காங்கிரஸ் கடந்த தேர்தலில்
எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. ஆனால் இந்த கட்சி சுயேச்சைகள்
மூலம் ஆட்சி அமைத்தது. இதன் மூலம் இங்குள்ள ஆளும் கட்சி, புதுச்சேரி
மக்களுக்கும், அ.தி.மு.க,வுக்கும் துரோகம் செய்துவிட்டது. இங்குள்ள
முதல்வர் செயல் இழந்தவராக உள்ளார். இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
இது போல் காங்., எம்.பி., நாராயணசாமியால் எவ்வித முன்னேற்றமும்
கிடைக்கவில்லை. பஞ்சாலைகள் திறக்க, வேலை வாய்ப்புகள் பெருக்கிட நாராயணசாமி
எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனி மாநில அந்தஸ்து பெற முயற்சி
செய்தாரா? புதிய தொழிற்சாலை துவக்கினாரா ? துறைமுக அபிவிருத்தி செய்தாரா ?
இது போன்று மாநில வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. இவ்வாறு ஜெ.,
பேசினார்.
0 comments:
Post a Comment