நாட்டுப்படகில் பவானிஆற்றை கடந்துசென்ற பண்ணாரிஅம்மன் சப்பரம்
சத்தியமங்கலம், மார்ச் 25:
கிராமங்களில்
பண்ணாரியம்மன் உலா வருவதையொட்டி, அக்கரை தத்தப்பள்ளி செல்வதற்காக அதன்
குறுக்கே செல்லும் பவானிஆற்றை நாட்டில் படகில் கடந்து சென்றது.அங்கு
திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை மலர்கள் தூவி வரவேற்றனர்.
பிரசித்தி
பெற்ற அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா திங்கள்கிழமை இரவு
பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோயில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு
புறப்பட்ட பண்ணாரி்அம்மன் உற்வசர் புதன்கிழமை காலை சிக்கரம்பாளையம்
வந்தடைந்தது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் மலர்களைதூவி அம்மனை வரவேற்றனர்.
இக்கிராமம் முழுவதும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள்பாலித்துவிட்டு
சப்பரம் அன்றிரவு வெள்ளியம்பாளையம் புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து
வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை வழியாக தொட்டம்பாளையம்
சென்றடைந்தது. வெள்ளிக்கிழமை வெள்ளியம்பாளையம்புதூரில் இருந்து
அக்கரைத்தத்தப்பள்ளி சென்றது. அப்போது இரு கிராமங்களுக்கு இடையே பாயும்
பவானிஆற்றை நாட்டுப்படகில் கடந்து சென்றது.
சனிக்கிழமை,
அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர் ஆகிய கிராமங்களில்
வீதியுலா நிறைவுற்றதும் அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை
தண்டுமாரியம்மன் கோயிலில் தங்குகிறது.
29,30-இல்
சத்தியமங்கலம் நகர்ப்புறத்தில் திருவீதியுலா காட்சியளிக்கும். 31-ம் தேதி
கோம்புப்பள்ளம் மாசான பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு
பட்டவர்த்தி அய்யம்பாளையம்,மாரியம்மன் கோயிலுக்கு சென்றடையும். .
பிற்பகலில் புதுவடவள்ளி, புதுக்குய்யனூர்,ராஜன்நகர் வழியாக
செவ்வாய்க்கிழமை மீண்டும் கோயிலை சென்றடைந்ததும். அன்றிரவு கோயிலில்
திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும்.
ஏப்ரல்
6-ஆம் தேதி இரவு திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வருதலும் 7-ஆம் தேதி
அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது. 13-ஆம் தேதி
மறுபூஜையுடன் விழா நிறைவுபெறும்.