தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 27, 2014

நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை  ஆதரித்து மேட்டுப்பாளையம் தொகுதியில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ,கிராமம்,கிராமமாக பிரச்சாரம்.




மேட்டுப்பாளையம்.மார்ச்.27.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை  ஆதரித்து மேட்டுப்பாளையம் தொகுதியில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ,கிராமம்,கிராமமாக பிரச்சாரம் செய்தார்.ஓடந்துறை ஊராட்சி,ஊமப் பாளையத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஓ.கே.சின்னராஜ் எம்,.எல்.ஏ, இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அவர் பேசியதாவது;அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டம் நிறைவேற அண்ணா.தி,மு,க.அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா பொய்யான பிரச்சாரம் செய்துவருகிறார்.. பில்லூர் அணையின் உபரிநீரை வாய்க்கால் அமைத்து குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு  அவினாசி திட்டம்  கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.200 கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார்.2001 ல் ஆட்சி மாற்றம் தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.5 ஆண்டுகளுக்கு பிறகு  அண்ணா தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை ரூ.500 கோடி திட்ட மதிப்பீடு செய்து அனுப்பியது.காவேரி நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பு வராத சூழ்நிலையில் காவேரியின் உபநதியான பவானி ஆற்றுக்கு வரும் எந்த நீரையும் பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டது.அந்த திட்டத்தை  மத்திய அரசு கிடப்பில் போட்டது.2006 ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க.அரசு திட்டம் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.2007 ல் காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்த பிறகும் எந்த முன்னேற்றமும்,இல்லை.2011 ல் மீண்டும் அண்ணா தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்திட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கினார்.அதன்பேரில் ரூ.1862 கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியான 50 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் ஆனால் மத்திய அரசு அந்த நிதியை ஒதுக்கவில்லை.காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு சரித்திர சாதனை படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா.
இந்த உண்மை கூட தெரியாமல் முன்னாள் அமைச்சர் ராசா உளறுகிறார்.மக்களை ஏமாற்ற பொய்பிரசாரம் செய்யும் தி.மு.க.வேட்பாளருக்கு வாக்காளர்களாகிய நீங்கள் தக்க பாடம் புகட்டவேண்டும்.அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபால கிருஷ்ணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பிரசாரத்தில்காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி, ஓடந்துறை ஊராட்சி செயலாளர் நடராஜ்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment