மேட்டுப்பாளையம் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.டாக்டர் சுதாகர் ஆய்வு.
நீலகிரி
பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட , மேட்டுப்பாளையம் தொகுதியில்
பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
குறித்து கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.டாக்டர் சுதாகர் ஆய்வு
செய்தார். மேட்டுப்பாளையம் நகரில் காட்டூர், எஸ்.எம்.நகர், உட்பட காரமடை, பெரிய
நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள சில வாக்குச்சாவடிகள்
பதற்றமானவை என தேர்தல் ஆணையம் அறிவித்ததின் பேரில் நேற்று நேரில் வந்து
ஆய்வு செய்தார். வாக்குச்சாவடிகளில் கூடுதல்
போலீஸ் பாதுகாப்பு,குறித்து காவல் துறையினருக்கு ஆலோசனைகள்
வழங்கினார்.. அவருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
முத்துராஜ், டி.எஸ்.பி.க்கள். மா டசாமி, ரவிசங்கர், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி, வெங்கடேசன், வெற்றிவே ந்தன் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment