பள்ளி வேன் பழுது. திம்பம் மலைப்பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் தனியார் பள்ளி பேருந்து பழுதாகி நின்றதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாலமாக
திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல் பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில்
அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள்
உள்ளன.
இந்த பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்
பயணிக்கின்றன. இந்நிலையில்,திருப்பூர் சிறுபூலுவபட்டி தனியார் பள்ளி மாணவ
மாணவியர் 2 பேருந்துகளில் கல்விச்சுற்றுலாவுக்கா மைசூர் நோக்கி
சென்றுகொண்டிருந்தனர்.
9 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது இரண்டாவதாக
சென்ற வேன் கியர்பாக்ஸ் பழுதாகி அதே இடத்தில் நின்றது. . இதனால் கர்நாடக
தமிழக இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதையில்
வாகனங்கள் அணிவகுந்து நின்றன. இதனையடுத்து, மாணவ,மாணவியர்கள் பேருந்தில்
இருந்து இறங்கிவிடப்பட்டனர்
சுமார் ஒரு மணிநேரத்துக்கு பிறகு பேருந்தில் ஏற்பட்ட கோளாறு
சரிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும்
வாகனப் போக்குவரத்து துவங்கியது.
0 comments:
Post a Comment