ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்காதது ஏன்? : ஜெ.,க்கு விஜயகாந்த் கேள்வி
வேலூர்: "ராஜிவ் கொலையாளிகளை, மூன்று நாளில் விடுதலை செய்வேன் என்று சொன்ன ஜெயலலிதா, இதுவரை விடுதலை செய்யாததற்கு, ஆட்சி பறிபோய்விடும் என்ற பயமே காரணம்,” என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க.,
தேர்தல் பிரசார கூட்டம், வேலூர், மண்டித் தெருவில் நேற்று முன்தினம் இரவு
நடந்தது. அதில், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பேசியதாவது: இப்போது,
சிதம்பரத்தின் மகன், கார்த்தியிடம் கேட்டால், "அனுபவம் உள்ளவர்கள் தான்,
தேர்தலில் நிற்க வேண்டும்' என, தந்தையை சிக்க வைப்பார். மக்கள் நல்லபடியாக
வாழ வேண்டும். அதற்காகவே கூட்டணி. நான் தனிக்காட்டு ராஜா போல, போய்க்
கொண்டே இருப்பேன்; அரசியல், சினிமா என, ஒரே நேரத்தில், இரண்டு குதிரை மீது
சவாரி செய்கிறேன்; மக்கள், தொண்டர்கள் கொடுக்கும் தைரியமே, அதற்கு காரணம்.
இந்தியா வல்லரசாக, இப்போது பலமான கூட்டணி அமைந்துள்ளது. மோடி தான்
பிரதமர். எம்.ஜி.ஆர்., கட்டிய கூட்டுக்குள், குடி புகுந்த கருநாகம்
ஜெயலலிதா; தி.மு.க.,விற்கும், இது கருணாநிதிக்கு பொருந்தும். ராஜிவ்
கொலையாளிகள், ஏழு பேரை, மூன்று நாளில் விடுதலை செய்வேன் என, ஜெயலலிதா
சொன்னார். ஏன் இதுவரை விடுதலை செய்யவில்லை. ஆட்சி பறிபோய் விடுமோ என்ற
பயத்தில் தான் ஜெயலலிதா, இதுவரை அவர்களை விடுதலை செய்யவில்லை. இவ்வாறு,
விஜயகாந்த் பேசினார்.
0 comments:
Post a Comment