ஈரோடு வடக்கு மாவட்ட கொமதேக நிர்வாகிகள் கூட்டம்
பவானி, மார்ச், 15:
மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஈரோடு வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் துரைராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில, அரசியல் சூழல், மக்களின் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பு, கூட்டணியில் கட்சியின் நிலை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், கொங்கு மண்டலத்தில் அதிக வாக்கு வங்கியைத் கொண்டுள்ள கொமதேகவுக்கு, போட்டியிட விரும்பும் தொகுதியை வழங்க வேண்டும்.
கேட்ட தொகுதிகளை கூட்டணியில் வழங்கப்படாத நிலையில் கொங்கு மண்டலத்தில் உள்ள 12 தொகுதிகளிலும் தனியே தேர்தலில் போட்டியிட வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மாவட்டத் தலைவர் அப்புசாமி கவுண்டர், பவானி, அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த ஒன்றியச் செயலர்கள் வி.மூர்த்தி, ராஜேந்திரன், பிரகாஷ், விஜயகுமார், பவானி நகரச் செயலர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஈரோடு வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் துரைராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில, அரசியல் சூழல், மக்களின் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பு, கூட்டணியில் கட்சியின் நிலை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், கொங்கு மண்டலத்தில் அதிக வாக்கு வங்கியைத் கொண்டுள்ள கொமதேகவுக்கு, போட்டியிட விரும்பும் தொகுதியை வழங்க வேண்டும்.
கேட்ட தொகுதிகளை கூட்டணியில் வழங்கப்படாத நிலையில் கொங்கு மண்டலத்தில் உள்ள 12 தொகுதிகளிலும் தனியே தேர்தலில் போட்டியிட வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மாவட்டத் தலைவர் அப்புசாமி கவுண்டர், பவானி, அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த ஒன்றியச் செயலர்கள் வி.மூர்த்தி, ராஜேந்திரன், பிரகாஷ், விஜயகுமார், பவானி நகரச் செயலர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
0 comments:
Post a Comment