திருக்குண்டம்: எரிக்கரும்புகளை காணிக்கையாக வழங்கிய பக்தர்கள்
பண்ணாரியம்மன்
கோயில் திருவிழாவையொட்டி, குண்டத்தில் தீ வார்ப்பதற்கு தேவையாக
எரிக்கரும்புகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு
பண்ணாரியம்மன் கோயில் விழா கடந்த 3ஆம் தேதி திருப்பூச்சாட்டுதலுடன்
துவங்கியது. விழாவையொட்டி, கோயிலில் தினமும் சிறப்பு வழிபாடு பூஜைகள்
நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும்
விழா (மார்ச்.18)செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு நடைபெறும். இதில்
லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இதனையொட்டி, வெயில்,மழை போன்றவற்றை
தாங்கக்கூடிய அலுமிய பந்தல் கோயில் வளாகத்தில் அமைக்கும் பணி நடந்து
வருகிறது. மேலும் கோடை வெப்பத்தை தணிக்க பக்தர்கள் செல்லும் பாதையில்
தண்ணீர் ஊற்றி குளிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றனர்.
விழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு குண்டத்தில் தீ
வார்க்கப்படுவதற்கு தேவையாக வேம்பு,ஊஞ்சல் மரத்துண்டுகளை சனிக்கிழமை முதல்
பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்பட்ட
மரத்துண்டுகள் கோவில் குண்டம் முன் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.
குண்டத்திற்கு தேவையாக 5 டன் மரத்துண்டுகளையும் பக்தர்கள் காணிக்கையாக
செலுத்துகின்றனர்.
குண்டம் இறங்கும் பக்தர்கள் புதன்கிழமை
முதலே கோவிலுக்கு வரத் துவங்கிவிட்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள்
மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாட்டுவண்டிகளில்
குடும்பம், குடும்பமாக வந்து கோயிலில் முகாமிட்டுள்ளனர். மேலும் திருச்சி,
தஞ்சாவூர்,சேலம், நாமக்கல்,கோவை, ஈரோடு மற்றும் கர்நாடகாவில் இருந்து
பக்தர்கள் வர துவங்கிவிட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து
வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக உணவு, குடிநீர்,
சுகாதாரம்,தங்கும் வசதி,மருத்தும் மற்றும் அம்மன் தரிசனத்துக்காக
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். கோவை,சேலம், ஊட்டி,
கோத்தகிரி, குன்னூர், கோபி, அந்தியூர், ஈரோடு மற்றும் கர்நாடக சாம்ராஜ்நகர்
ஆகிய இடங்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சத்தியில் இரு்ந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் நூற்றுக்கணக்கான அரசு
பேருந்துகள் பண்ணாரிக்கு இயக்கப்படுகின்றன
0 comments:
Post a Comment