காரமடை வித்யா விகாஸ் சர்வதேசப்பள்ளியில்2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
மேட்டுப்பாளையம்.மார்ச்.22.
கா ரமடை
வித்யா விகாஸ் சர்வதேசப் பள்ளியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று
நடத்தது.பள்ளியின் இயக்குனர் ஆர்.சசிராஜ்குமார் வரவேற்று பேசினார். முதல்வர்
சுஜாதா பெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குனர்கள்
ஆர்.சுரேஷ்குமார், டி.ராஜு, சி வசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும்
மேலாண்மை இயக்குனர் முனைவர் எஸ்.குணசேகரன் தலைமை தாங்கி யு.கே.ஜி.மாணவ
மாணவிகள் 24 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர்
கூறியதாவது.குழந்தைகளுக்கு உலக தரமான கல்வியை வித்யா விகாஸ் கல்வி
நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. மாணவர்களின் வளர்ச்சியில், ஆசிரியருடன்
பெற்றோரும் இணைந்து செயல்பட்டால் நல்ல திறமையான மாணவர்களை
உருவாக்க முடியும். கல்வியின் முக்கியத்துவம், தற்கால கல்வியின் வளர்ச்சி நிலை
செயலாக்க ஈடுபாடு குறித்து சிறப்புரை ஆற்றினார்.பின்னர் குழந்தைகளின் கலை
நிகழ்சிகள் நடைபெற்றன.முடிவில் பாலர் வகுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர்
ஹாசில் ஆண்டனி நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment