சத்தி பெரியூர் மாகாளியம்மன் கோவில் விழா
சத்தியமங்கலம், ஏப்.8:
சத்தியமங்கலம் அடுத்துள்ள பெரியூர் மாகாளியம்மன் கோவிலில் புதன்கிழமை நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள பெரியூர் மாகாளியம்மன் கோவிலில் புதன்கிழமை நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள பெரியூர் மாகாளியம்மன் கோவில் விழா மார்ச்
24-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 31-ஆம் தேதி திருக்கம்பம்
சாட்டுதலும் ஏப்.3-இல் கிராமசாந்தி, 4-ஆல் கொடியேற்றம் மற்றும் 6-இல்
புதுவரம் காப்புக்கட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி,
நாள்தோறும் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை
காலை நடந்த கரும்பு கொண்டு வருதல் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட
கிராமமக்கள் பங்கேற்று குண்டத்துக்கு தேவையான வேம்பு மற்றும் ஊஞ்சல்
மரங்களை காணிக்கையாக அளித்தனர். அன்றிரவு 60 அடி தீக்குண்டம்
வார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புஷ்பப் பல்லாக்கில் மின்விளக்கு
அலங்காரத்துடன் அம்மன் அழைத்தல வரம் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
புகன்கிழமை காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி செல்லி குண்டத்துக்கு சிறப்புபூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர்.
பெரியூர், செண்பகபுதூர்,ஜல்லியூர், மில்மேடு, மூலக்கிணறு, கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், உக்கரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சத்தியமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டிருந்தனர்.
புகன்கிழமை காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி செல்லி குண்டத்துக்கு சிறப்புபூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர்.
பெரியூர், செண்பகபுதூர்,ஜல்லியூர், மில்மேடு, மூலக்கிணறு, கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், உக்கரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சத்தியமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டிருந்தனர்.