தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 24, 2014

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணப்ப கவுடர் மறைவையொட்டி காரமடையில் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
 


காரமடை கன்னார்பாளையத்தை அடுத்த எஸ்எம்டி ஸ்பின்னிங் மில்ஸ் பண்ணை வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தாலுகா செயலர் மூர்த்தி தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் எம்.கே.கே.விஜயன், மாவட்ட செயலர் டி.ஆர்.எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்எம்டி நிர்வாக இயக்குநர் கே. கல்யாணசுந்தரம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணப்ப கவுடர் படத்தை திறந்து வைத்து கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசியது:
கிருஷ்ணப்ப கவுடர் போன்ற தன்னலம் கருதாத தலைவர்களின் உழைப்பில் வளர்ந்த இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தனது சொந்த நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை கட்சிக்காக செலவு செய்தவர். அவரது குடும்பத்திற்கு எண்ணற்ற நண்பர்களை பெற்றுத் தந்துள்ளார். தந்தையார் விட்டு சென்ற இடத்தை நிரப்புவதை அவரது புதல்வர்கள் கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் ஆறுமுகம் (வால்பாறை), சுந்தரம் (பவானிசாகர்), கம்யூனிஸ்ட் கட்சியின் காரமடை நகர தலைவர் தங்கவேல், மதிமுக மாவட்ட பொருளாளர் பி.என். ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியாக ரூ. 25 ஆயிரம் தொகையை தா. பாண்டியனிடம் எஸ்எம்டி குரூப் நிறுவனங்களின் இயக்குநர் கவிதா கல்யாணசுந்தரம்.வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஞானசேகரன், ஒக்கலிக மகாஜன சங்க மாநில இளைஞரணி தலைவர் ஜோதிமணி, தொழிலதிபர்கள் நந்தகுமார், ரகுநாதன், அலாய்ஸ் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  கட்சியின் முன்னாள் மாவட்ட தொழிற்சங்க தலைவர் டி.ஆர். ஈஸ்வரன் நன்றி கூறினார்

0 comments:

Post a Comment