தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, February 27, 2014

புன்செய் புளியம்பட்டியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு


புன்செய் புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் பவானிசாகர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் வி.கே.சண்முகம் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு சீர் தட்டுகளை வழங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் தேவிகுமரி வரவேற்றார். ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் விழாவினை துவக்கி வைத்தார்.
பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, புளியம்பட்டி நகராட்சி துணை தலைவர் டி.பாபு, புளியம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், விண்ணப்பள்ளி மருத்துவ அலுவலர் வெங்கடாசலம் , பவானிசாகர் ஆணையாளர் சார்லஸ் கென்னடி மற்றும் ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் தட்டுகள் வழங்கப்பட்டது. நிறைவாக பவானிசாகர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்(பொறுப்பு) உஷாராணி நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment