குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜெயலலிதா
மதுரையில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்த
முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, மத்தியில் பதவியில் உள்ள ஊழல் ஆட்சிக்கு
மக்கள் முற்று புள்ளி வைக்கவேண்டும்.தமிழர்களின் நலனை பாதுகாக்கும் அரசு
மத்தியில் அமைய வேண்டும். மத்தியில் மக்கள் ஆட்சி அமைந்தால் மட்டும்
போதாது.அதில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியாக இருக்கவேண்டும். குடும்ப
ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில்
மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்தது அதிமுக அரசு என்று பேசினார்.
0 comments:
Post a Comment