தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 26, 2014

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் ஆய்வு.



மேட்டுப்பாளையம்.மார்ச்.25.
தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளர் சுப்புரான் சூ குன்னூரில் நடந்த கருத்தரங்கில் கலந்துவிட்டு ஊட்டி மலை ரயிலில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையதிற்கு வருகைதந்தார்.அவரை மேட்டுப்பாளையம் ரயில்நிலைய அதிகாரி சரவணக்குமார்,மற்றும் அதிகாரிகள்,தொழிலாளர்கள் வரவேற்றனர்.பின்னர்,அவர் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.புதியதாக அமைக்கப்பட்ட நடைபாதை,பாரம்பரிய மலைரயில் கண்காட்சி அமைய உள்ள செட் ஆகியவற்றை பார்வையிட்டார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது; மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 3 பெட்டிகளுடன் மலைரயில் செல்கிறது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று 4 வது பெட்டியுடன் செல்ல ஆய்வு பணி மேற்கொள்ளப்படும்.மேட்டுப்பாளையம் கோவை இடையே இயங்கி வரும் பயணிகள் ரயிலை ஞாயிற்றுகிழமைகளில் இயக்க ரயில்வே போர்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் செயல்படுத்தப்படும்.
 
கோவை -மேட்டுப்பாளையம் இடையே மின்பாதை அமைக்கும் பணி கடந்த 6 மாதமாக நடந்துவருகிறது.விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 comments:

Post a Comment