தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக மோகன் வர்கீஸ் நியமனம்!
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் பணியிலிருந்து
ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தலைமைச் செயலராக மோகன் வர்கீஸ் சுங்கத்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 31 ஆம் தேதியுடன் பணியிலிருந்து
ஓய்வுபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சுற்றுச் சூழல் மற்றும்
வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரியான
மோகன் வர்கீஸ் சுங்கத் அப்பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.
மேலும் ஷீலா பாலகிருஷ்ணன் வகித்த நிர்வாக சீர்திருத்தத்திற்கான கண்காணிப்பு
ஆணையர் மற்றும் ஆணையர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார் எனவும் தமிழக
அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி ஷீலாராணி சுங்கத்தின் கணவர் தான் மோகன் வர்கீஸ் சுங்கத்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment