தமிழக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு!!
டெல்லி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின்
வேட்பாளராக கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார்
போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்
குழுவின் நிர்வாகிகளான சுப. உதயகுமார் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி கட்சியில்
இணைந்துள்ளனர். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில்
கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகள் களமிறங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் லோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின்
7வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 26 பேர் கொண்ட
இந்த பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பெயரும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்
குழுவின் சுப. உதயகுமார். தூத்துக்குடியில் எஸ்.புஷ்பராயன், நெல்லையில்
ஜேசுராஜ் போட்டியிடுகின்றனர்.
அத்துடன் கோவையில் பொன் சந்திரன், ஈரோட்டில் குமாரசாமி, சேலத்தில் சதீஷ்
குமார், மத்திய சென்னையில் ஜெ.பிரபாகர், திருப்பூரில் ஆர்.சக்கரவர்த்தி
ராஜகோபால கிருஷ்ணன், புதுச்சேரியில் வி.ரங்கராஜன் ஆகியோர் ஆம் ஆத்மி
வேட்பாளர்களாக களமிறங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment