அரசியல் வேண்டாம் நடிப்பே போதும்: ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்
சத்தியமங்கலம்,மார்ச் 29:
அரசியலில் வேண்டாம் என்றும் நடிகனாக இருக்க விரும்புவதாக தயாரிப்பாளரும் நடிருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும்
பிரசாரம் செய்து வருகிறார்.இதன் ஒருபகுதியாக, நீலகிரி மக்களவைத் தொகுதி
வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து சத்தியமங்கலத்தில் ஸ்டாலின் பிரசாரம்
செய்தார். அப்போது, அவருடன் மனைவி துர்கா, மகனும் நடிகருமான உதயநிதி
ஸ்டாலின் உடன் வந்தனர். முன்னதாக ஸ்டாலின் சத்தியமங்கலம் முன்னாள் எம்எல்ஏ
எல்.பி.தர்மலிங்கம் வீட்டிற்கு வந்த போது எல்.பி.தர்மலிங்கம்
குடும்பத்தினர் அவரை வரவேற்றனர்.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியது:
வேட்பாளர்களை ஆதரித்து அப்பா தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது நானும்
உடல் செல்வது வழக்கம். நான் 11 வயது சிறுவனாக இருந்த காலம் முதல் அவருடன்
பிரசாரத்திற்கு சென்றுள்ளேன்.ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை.
தற்போது, நண்பேன்டா என்ற படத்தில் சந்தானத்துடன்
நடித்து வருகிறேன். திரைப்பட நடிகனாக உயர்ந்து வரும் இந்த வேளையில் எனக்கு
ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். என்னுடையை ரசிகர்களிடம் அரசியலுக்கு
பயன்படுத்துவதில்லை. எனக்கு அரசியல் வேண்டாம். நல்ல நடிகனாக வர வேண்டும்
என விரும்புகிறேன்.
சண்டை படத்தில் நடிப்பது எனக்கு பொருந்தமாக இருக்காது.
காமெடி கதாநாயகனாகவே நடிக்க விரும்புகிறேன். எனக்கும் சந்தானத்திற்கும்
நல்ல காம்பினேசன் உள்ளது. இதை பிரிக்க வேண்டாம். மூன்றாவது படமும் என்னுடைய
தயாரிப்பில் உருவாகி வருகிறது. 10 நாள்கள் சூட்டிங் இல்லை என்பதால்
அப்பாவுக்கு உறுதுணையாக வெள்ளிக்கிழமை முதல் உடன் வந்துள்ளேன்.
ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புகிறேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில்
நடித்தபோது ஏற்பட்ட சிறு குறைகளை கதிர்வேலன் காதல் படித்தில் அதை நிறைவு
செய்தேன். கதிர்வேலன் காதல் படத்தில் நல்ல நடித்துள்ளதாக என்னை
பாராட்டினார்கள். அடுத்த படத்தில் நடிப்பில் மேலும் கவனம் செலுத்துவேன்.
0 comments:
Post a Comment