தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, December 28, 2014



நம்பியூர் புத்தக திருவிழாவில் பெருந்துறை வளர்தமிழ் தென்றல் கோ.பா.ரவிக்குமார் கலந்து கொண்டு படிப்பது சுகமே என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அருகில் நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், ஸ்ரீ ரங்கவிலாஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளர் எம்.குணசேகரன், குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜனகரத்தினம், அரிமா சங்க பட்டைய தலைவர் வெங்குடுசாமி ஆகியோர் உள்ளனர்.

Saturday, December 27, 2014

உலகுக்கே வழிகாட்டியாக திகழ்வது திருக்குறள்
- ஸ்டாலின் குணசேகரன்





விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது.

மாலை நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். காமராஜ் பள்ளியின் தாளாளர் கருப்புசாமி, நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் சண்முகசுந்தரம், நம்பியூர் காவல்துறை ஆய்வாளர் விவேகானந்தன், அரிமா சங்க தலைவர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும் போது புத்தகங்கள் தனி மனித வாழ்கைக்கு மட்டுமல்ல சமுதாய முன்னேற்றத்துக்கும் காரணமாக இருக்கின்றன. ஒரு புத்தகம் மனிதனின் வாழ்வை மாற்றி விடும். மாணவர்கள் மீது நாம் அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும். மாணவர்களை மட்டும் நாம் சரியாக வழிநடத்தினால் அவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. மாணவ மாணவியர்கள் பாட புத்தகத்தோடு பிற புத்தகங்களை படிக்க வேண்டும். பாடபுத்தகங்களை படிக்கும் போது அறிவாளியாகலாம். பாடம் அல்லாத புத்தகங்களை பாதிக்கும் போது நல்ல மனிதன் ஆகலாம். மாணவர்களை பண்படுத்தும், பக்குவபடுத்தும் ஆயுதம் புத்தகம். அடுத்த தலைமுறை கையில்தான் இந்த சமுதாயம் இருக்கிறது. புத்தகங்களை வாசிக்கும் போது ஈடுபாட்டோடு மனபூர்வமாக வாசிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் இல்லந்தோறும் சிறிய நூலகம் அமைக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நல்ல நூல்கள் நமக்கு நண்பன்.

உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள். அடுத்த இரண்டாம் இடம் குரான். மூன்றாம் இடத்தில் இருப்பது திருக்குறள். திருக்குறளில் இல்லாத விசயங்களே இல்லை. அய்யன் திருவள்ளுவரால் 2000 ஆண்டுகளுக்கே முன்பே நம் வாழ்கைக்கு வேண்டிய அத்தனை விசயங்களையும் தந்த நூல் திருக்குறள். திருக்குறள் இல்லாத வீடே இருக்க கூடாது. மாணவ மாணவியர்கள் திருக்குறளை முழுவதுமாக படிக்க வேண்டும். மலேசிய அரசாங்கம் திருக்குறளை தமிழில், ஆங்கிலத்தில், மலாய் மொழியில் அச்சிட்டு ஆண்டுதோறும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. நம் தாய்மொழியில், தமிழ் மொழியில் திருக்குறளை படிக்கும் இனிமை, இன்பம் மொழிபெயர்ப்பு நூலில் கிடைக்காது.உலகுக்கே வழிகாட்டியாக திகழ்வது திருக்குறள் தான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாங்கி தர வேண்டும். நம் மண்ணின் அருமை பெருமைகளை, சுதந்திர இந்தியாவின் வரலாற்றை, நம் கலாசாரத்தை அறிந்து கொள்ள தேடி தேடி நூல்களை படிக்க வேண்டும். நம்பியூர்  புத்தக திருவிழாவை அனைத்து பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

நிறைவாக நம்பியூர் அரிமா சங்க பட்டைய தலைவர் வெங்குடுசாமி நன்றி கூறினார்.

Thursday, December 25, 2014

 நம்பியூர் வாசிக்கிறது




விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு வெட்டையம்பாளையம் கொமரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 800 மாணவ மாணவியர்கள் புத்தகம் வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.கே.சிவகுமார்,  விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.

Wednesday, December 24, 2014

நம்பியூர் புத்தக திருவிழா துவங்கியது

 
நம்பியூர் டிசம்பர் 24:

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  துவங்கியது


இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  நடைபெறுகிறது.

நம்பியூர் புத்தக திருவிழாவின் துவக்க விழாவில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். நம்பியூர் அரிமா சங்க மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் கல்யாண சுந்தரம் புத்தக அரங்கினை திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை பி.கே.ஆர் குழும தலைவர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். நம்பியூர் காவல்துறை ஆய்வாளர் ஆர்.விவேகானந்தன், உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பையா, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கந்தசாமி, காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பையன், குமுதா கல்வி நிறுவன தலைவர் ஜனகரத்தினம், கொமரசாமி கவுண்டர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சிவகுமார், காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் கருப்புசாமி,செந்தூர் பாலிடெக்னிக் முதல்வர் அர்ஜுனன், சிந்தாமணி வித்யாலயா நிர்வாகி லோகநாதன், நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், அரிமா வெங்குடுசாமி மற்றும் அரிமா உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


இக்கண்காட்சியில்  25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.  பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளது. கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு  தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. டிசம்பர் 24 ஆம் தேதி மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். டிசம்பர் 25 ஆம் தேதி பெருந்துறை வளர் தென்றல் கோ.பா.ரவிக்குமார் பேசுகிறார். டிசம்பர் 26 ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி, அரிமா கே.தனபாலன்  ஆகியோர் பேசுகிறார்கள்.  டிசம்பர் 27ஆம் தேதி கோயம்புத்தூர் தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் சூரியநாராயணன்  பேசுகிறார். டிசம்பர் 28 ஆம் தேதி நிறைவு விழாவில் முனைவர் எஸ்.உஷாராணி  பேசுகிறார்.

நம்பியூர் புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலி
 
 
 
புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 20:

புன்செய் புளியம்பட்டி மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் பெஷாவர்  ராணுவ பள்ளியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 132 மாணவ மாணவியர்களுக்கு  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முத்துக்குமார், விடியல் செயலாளர் ஜெயகாந்தன், உறுப்பினர்கள் சக்திவேல், லோகநாதன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 700 இக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நம்பியூரில்  முதல்முறையாக புத்தக திருவிழா

டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.


நம்பியூர் டிசம்பர் 22:

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  நடைபெறுகிறது.

இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருபதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில்நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம், ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ரீடிங் இந்தியா புக்ஸ்,  விவேகானந்தா புத்தகாலயம்  உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில கிடைக்க உள்ளது.கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு  தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. டிசம்பர் 24 ஆம் தேதி மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். டிசம்பர் 25 ஆம் தேதி பெருந்துறை வளர் தென்றல் கோ.பா.ரவிக்குமார் பேசுகிறார். டிசம்பர் 26 ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி, அரிமா கே.தனபாலன்  ஆகியோர் பேசுகிறார்கள்.  டிசம்பர் 27ஆம் தேதி கோயம்புத்தூர் தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் சூரியநாராயணன்  பேசுகிறார். டிசம்பர் 28 ஆம் தேதி நிறைவு விழாவில் முனைவர் எஸ்.உஷாராணி  பேசுகிறார்.
நம்பியூர் புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.

Monday, December 15, 2014

பகலில் இரவாக மாறிய திம்பம் மலைப்பாதை. கடும் பனிமூட்டத்தால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்




சத்தியமங்கலம், டிச 15: சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் நேற்று பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் தவித்தனர்.

சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. கடல்மட்டத்திலிருந்து 1105 மீட்டர் உயரத்தில் உள்ளதால் இங்கு ஊட்டி போன்று கடுங்குளிர் நிலவுவது வழக்கம். கடந்த சில நாட்களாக குளிருடன் கடும்பனிமுட்டம் உள்ளதால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மஞ்சள்நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கினர். இதனால் வாகனங்கள் மலைப்பாதையில் வழக்கமாக அரைமணி நேரத்தில் கடக்கும் தூரத்தை அடைய ஒருமணிநேரம் ஆகிறது. இதனால் இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனை ச்சாவடிகளில் நின்று பனிமூட்டம் விலகிய பின்பு புறப்பட்டு செல்கின்றன. இரவு நேரம் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் குளிர் காரணமாக பணிக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர். மேகமூட்டமும் பனிப்பொழிவும் காலை 11 மணிவரை நீடிப்பதால் சாலைகளில் எதிரேவரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திம்பம், ஆசனுர், கேர்மாளம் மற்றும் தாளவாடி ஆகிய சுற்றுவட்டார மலைகிராமங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் கடுங்குளிரால் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர்.

Thursday, December 11, 2014

புன்செய் புளியம்பட்டியில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா



 


புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்தநாள் விழா புன்செய் புளியம்பட்டியை அடுத்த எம்.கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். கிராம அறிவு மையத்தின் இயக்குனர் கந்தசாமி, விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மகாகவி பாரதியார் அவர்களின் சிறப்புகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து 100 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பாரதி உருவபடத்தின் முகமூடி அணித்து பாரதியார் பாடல்களை பாடினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Wednesday, December 10, 2014

புன்செய் புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாக்கி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை
*******************************************************************************************************


புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 11:

புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேனியில் நடைபெற்ற 32ஆவது பாரதியார் தின விழா ஹாக்கி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

32 ஆவது பாரதியார் தின விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் தேனியில் நடைபெற்றது. புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆரம்ப சுற்றுகளில் திருநெல்வேலி அணியை 4-0 என்ற கணக்கிலும், ஆவடி அணியை 3-0 என்ற கணக்கிலும் வென்று அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதி போட்டியில் சேலம் அணியை 1-0 என்ற கணக்கிலும் இறுதி போட்டியில் திருவண்ணாமலை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை 4-0 என்ற கணக்கிலும் வெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். மொத்தம் 16 டிவிசன் இடையே நடைபெற்ற ஹாக்கி போட்டியில் புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று கோப்பையை வென்றுள்ளனர். இப்பள்ளி தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக மாநில அளவில் ஹாக்கி போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் பெற்று கோப்பை மற்றும் தலா 75000 ரொக்கபரிசு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முதல்வர் கோப்பை வென்று தலா 1 லட்சம் ரொக்கபரிசு பெற்று இப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி புன்செய் புளியம்பட்டி ஆதிபராசக்தி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.லிங்கப்பா கவுண்டர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன் முன்னிலை வகித்தார்.

புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு, விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், நகரமன்ற உறுப்பினர் முரளி கிருஷ்ணன், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் செந்தில்குமரன் உள்பட பலரும் கலந்து கொண்டு ஹாக்கி அணி பயிற்சியாளர் அருள்ராஜ் மற்றும் கோப்பை வென்ற அணித்தலைவர் அம்முகுட்டி, வீராங்கனைகள் ஐஸ்வர்யா, ரேணுகா, கற்பகம், பாக்யா, காயத்திரி, சுப்புலட்சுமி, பூங்கொடி, துர்காதேவி, கோமதி, சுகப்ரியா, நர்மதா, யமுனாதேவி, ஜெயஸ்ரீ, அப்ரீதா, அஸ்வினி, பார்வதி, பாத்திமாபிவி ஆகிய மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சாதனை மாணவிகள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஊர்வலம் ஆதிபராசக்தி கோவிலில் தொடங்கி மெயின் ரோடு வழியாக டானாபுதூர் கெ.ஒ.ம அரசு மகளிர் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கெ.ஒ.ம அரசு மகளிர் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட 1500 இக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.




Monday, December 1, 2014

தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்பதை உணர்த்தியவர் நா.மகாலிங்கம்: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
 




சத்தியமங்கலம்,டிச 1:தனிமனிதன் தன்னை உயர்த்திக்கொண்டு, சுற்றியுள்ள சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்பது மறைந்த நா.மகாலிங்கத்தின் எண்ணம் என சத்தியில் திங்கள்கிழமை நடைபெற்ற அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷண்ராஜ் தெரிவி்த்தார்.

மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் நா.மகாலிங்கத்துக்கு நினைவஞ்சலிக் கூட்டம் சத்தியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த  இக்கூட்டத்திற்கு பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினார்.

 கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ், நா.மகாலிங்கம் உடனான நினைவு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியது: தன்னையும் உயர்த்திக்கொண்டு சுற்றிவாழும் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நா.மகாலிங்கம். வந்தோம், வாழ்ந்தோம்,சென்றோம் என்றில்லாமல் துணிச்சல், சரித்திரம், வாழ்க்கையில் வெற்றி என்பது நிரூபித்து காட்டியவர்.அவரது சமூகப்பணி  நேற்றைய தலைமுறைக்கும் மட்டுமே தெரியும். இதனை இன்றைய தலைமுறையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கரும்பு சாகுபடியால் விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம்,அரசியல்,தொழில்,கல்வி என அனைத்து துறைகளிலும் கால்பதித்தவர். அவரது கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தால் வெற்றி நம் அருகில் வரும் என்றார். சத்தி பண்ணாரிஅம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், சத்தி காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவர் ஆர்.பெருமாள்சாமி, சக்தி சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியம், பொதிகை தொலைகாட்சி மைய இயக்குநர் ஆண்டால் பிரியதர்சினி,முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.என்.பாலசுப்பிரமணியம், எல்.பி.தர்மலிங்கம், சத்தி பண்ணாரிஅம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஏ.என்.குழந்தைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 புன்செய் புளியம்பட்டியில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி -
2000 மாணவர்கள் பங்கேற்பு
************************************************************


 
 

புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 2:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014  நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். சங்கரா அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தார்.  கோவை பாரதியார் பல்கலைகழகம் அண்ணா ஐ. ஏ. எஸ்.  பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்.பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தேர்வு ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் செல்வி நித்யா ராமசந்திரன் வெளியிட்டார். வெளியிடுகிறார். உடல்நலம் குறித்து டாக்டர் ராமசாமி, தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேலு, ரேடியோ சிட்டி சீயான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.

மேலும் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக இலவசமாக வழங்கபட்டன.

இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி, பனையம்பள்ளி, காவிலிபாளையம், பெத்திகுட்டை, பட்டிமணியகாரன்பாளையம், வேமாண்டம்பாளையம், எஸ்.புங்கம்பாளையம், நல்லூர், செம்மம்பாளையம், வாலிபாளையம்,மில்மேடு, காராபாடி உள்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள  20 இகும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 2000 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் தலைவர் கே.தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல், வடிவேலன் மற்றும் சங்கரா கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.






புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014 நடைபெற்றது. விடியல் வழிகாட்டி 2014 நிகழ்ச்சியில் திரண்ட மாணவ மாணவியர்களின் கூட்டம்

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014  நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்வு ஆலோசனை கையேட்டினை டாக்டர் பத்மநாபன், சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை செயலாளர் நித்ய ராமசந்திரன் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினர். அருகில் சங்கரா கல்லூரி செயலாளர் சந்தியா ராமசந்திரன், அறிவியல் கல்லூரி முதல்வர்  எஸ்.நடராஜன், பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ், விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோர் உள்ளனர்.
புன்செய் புளியம்பட்டியில்10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி



புன்செய் புளியம்பட்டி நவம்பர் 28:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014 வருகின்ற 30-11-2014 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, புன்செய் புளியம்பட்டி  விடியல் சமூகநல இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் 10 ஆவது மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி வருகின்ற 30-11-2014 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கரா அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்குகிறார். சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகிக்கிறார். கோவை பாரதியார் பல்கலைகழகம் அண்ணா ஐ. ஏ. எஸ்.  பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்.பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தேர்வு ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் செல்வி நித்யா ராமசந்திரன் வெளியிடுகிறார். உடல்நலம் குறித்து டாக்டர் ராமசாமி, தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேலு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். மேலும் புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது  போன்ற வினாக்களுக்கு பிரபல கல்வியாளர்கள் விழாவில் கலந்து கொண்டு வழிகாட்டுகிறார்கள். மேலும் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கமளிக்க உள்ளார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக  வழங்கப்பட உள்ளன.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீணான பயம், பதற்றம் இவற்றை நீக்கி தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதும் வகையிலும்,  எதிர்கால வாழ்கைக்கு வழிகாட்டும் வகையிலும் நடைபெற உள்ள
இந்நிகழ்ச்சியில்  மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம். நிகழ்ச்சி குறித்து மேலும் விபரங்களுக்கு 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
திம்பம் மலைப்பாதையில் மீண்டும் ஆள்கொல்லி சிறுத்தை தாக்கி தொழிலாளி பலி







திம்பம் மலைப்பாதையில் மீண்டும் ஆள்கொல்லி சிறுத்தை தாக்கியதில் கூலித்தொழிலாளி பலியானார்.இச்சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நொக்கஹள்ளி என்ற இடத்தில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய காய்கறி மினிலாரி, மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் ரமேஷ் ஓட்டினார். அதில் நொக்கஹள்ளியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஸ்ரீவாசன்(35),ஜடையன்(32) ஆகியோரும்  வந்தனர்.  புதன்கிழமை இரவு திம்பம் மலைப்பாதை 25-ஆவது வளைவு பாதையில் திரும்பும்போது மினிலாரி பழுதாகி நின்றது. இதையடுத்து, 3 பேரும் லாரியை அதே இடத்தில் நிறுத்துவிட்டு மற்றொரு வேனை வரவழைத்து அதில் காய்கறிகளை ஏற்றினர். அதன்பிறகு, ஓட்டுநர் ரமேஷ் காய்கறி வேனில் சத்தி சென்றுவிட்டார்.  தொழிலாளர்கள் இருவரும் பழுதாகி நிற்கும் வேனில்  தங்கியிருந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீவாசன் மலம் கழிப்பதற்காக வனத்தையொட்டியுள்ள இடத்திற்கு சென்றார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஸ்ரீவாசனினை தாக்கியது. அவரை காட்டுக்குள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது.  இதனை நேரில் பார்த்து உறைந்துபோன மற்றொரு தொழிலாளி ஜடையன், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி நடந்த சம்பவத்தை கூறினார்.  அதனைத் தொடர்ந்து, 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுசேர்ந்தபடி வரிசையாக சென்றன. பின்னர்,அவர்கள் நடந்த சம்பவத்தை பண்ணாரி சோதனைசாவடியில் பணியில் இருந்த வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சத்தி புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கே.ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் வியாழக்கிழமை சம்பவயிடத்தை ஆய்வு செய்தனர். மலைப்பாதையில் இருந்து சுமார் 50 அடி சரிவுபாதையில் அடர்ந்த புதர்மறைவில் ஸ்ரீவாசன் சடலம் கிடப்பது தெரியவந்தது. சடலத்தின் அருகில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என அஞ்சிய வனத்துறையினர் வானத்தை நோக்கி  துப்பாக்கியால் சுட்டபடி காட்டுக்குள் சென்றனர்.  புதர்மறைவில் கிடந்த ஸ்ரீவாசன் சடலத்தை  அவர்கள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், இதே பகுதியில் வேன் டிரைவர் முகமது இலியாஸ் மற்றும் வனக்காவலர் கிருஷ்ணன் சிறுத்தையால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து புலிகள் காப்பக இணை இயக்குநர் கே.ராஜ்குமார் கூறியது: இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிகம் நடமாடாடும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் வனச்சாலையில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். தற்போது, திம்பம் பாதையில் காமிராக்கள் வைத்து ஆட்கொல்லி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். இரவுமுழுவதும் வனத்துறையின் ரோந்து படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றால் உடனடியாக பண்ணாரியில் உள்ள ரோந்து படையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் ஓட்டுர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்வார்கள் என்றார்.