தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 17, 2014

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, செல்ஃபோன்களுக்கு SMS அனுப்பும் புதிய முறை : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் 

 

தமிழகத்தில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள், வாக்களிக்க ஏதுவாக, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாளன்று, வாக்காளர்களின் செல்ஃபோன்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பும் முறை முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. பிரவீன்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்காளர்களை வாக்களிக்கச் செய்ய, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் வாக்காளர்களின் கைப்பேசி எண்களுக்கு, மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள 24ம் தேதிக்கு முன்தினமும், வாக்குப்பதிவு நாளன்றும், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் தகவல்கள், குறுஞ்செய்தி மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், திரு. பிரவீன்குமார் குறிப்பிட்டார். 

0 comments:

Post a Comment