மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி மேலாளருக்கு பிரிவு உபச்சார விழா.
மேட்டுப்பாளையம்
நகர கூட்டுறவு வங்கியின் ஜோதிபுரம் கிளையின் மேலாளர் ஆர்.ஆறுமுகம் கடந்த
1978 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 36 வருடம் பணியாற்றி நேற்று பணி ஓய்வு
பெற்றார்.அவருக்கு பிரிவு உபச்சார விழா.மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு
வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர்
கே.ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சங்கர் நகர் ராஜன்
[எ]எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.மேலாண்மை இயக்குனர் கே.மகேந்திரன்
வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் வங்கி இயக்குனர்கள்
பி.ஆறுமுகம்,எஸ்.ஏ.வாஹித்,எம்.எஸ்.மாணிக்கம்,என்.பாலன்,கே.பி.தண்டபாணி,நபீஸா,தனலட்சுமி,வி.மாதவன்,லட்சுமி,முன்னாள்
இயக்குனர் ராமச்சந்திரன்,மேட்டுப்பாளையம் வேளாண்மைத்துறை பணியாளர்கள்
சிக்கன கடன் சங்க செயலாளர் குணவதி,வங்கி மேலாளர்கள்
விஜயராகவன்,என்.விஜயகுமார்,மற்றும் மூர்த்தி,உட்பட பணியாளர்கள்
வாழ்த்தி பேசினார்கள்.பின்னர் பணி ஓய்வு பெறும் மேலாளர் ஆர்.ஆறுமுகம்
ஏற்புரை ஆற்றினார்.முடிவில் வங்கியின் பொதுமேலாளர் கே.ராமதாஸ் நன்றி
கூறினார்.
0 comments:
Post a Comment