சத்தியில் அதிமுகவினர் மோட்டார் சைக்கிள் பிரசாரம்
சத்தியமங்கலத்தில் அதிமுகவினர் இறுதிக் கட்டமாக பிரசாரமாக மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்தனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக
வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து அதிமுகவினர் சத்தி பகுதியில் ஆதரவு
திரட்டி வருகின்றனர்.மக்களவைத் தேர்த்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம்
செவ்வாய்க்கிழமை மாலை ஓய்ந்தது.
சத்தி, பவானிசகார்,தாளவாடி ஒன்றியத்தைச் சேர்ந்த
300க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் இறுதிக்கட்ட பிரசாரமாக மோட்டார்
சைக்கிள் பேரணி நடத்தினர். முன்னதாக, எஸ்.ஆர்.டி. கார்னரிலிருந்து
புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியை ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர்
எஸ்.ஆர்.செல்வம் துவக்கி வைத்தார்.
இந்த பேரணி மைசூர் சாலை, செண்பகபுதூர், புங்கம்பள்ளி,
நல்லூர் வழியாக புன்செய் புளியம்பட்டியை சென்றடைந்தது. இதில் பவானிசாகர்
ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தி நகர்மன்றத் தலைவர்
ஓ.எம்.சுப்பிரமணியம், அதிமுக சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், சத்தி
நகர செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்
எஸ்.கே.பழனிச்சாமி, எம்ஜிஆர் மன்ற புறநகர் மாவட்ட துணைச் செயலாளர்
என்.ஆர்.கருப்புச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment