தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 17, 2014

பாரதீய ஜனதா கூட்டணி சுயநல கூட்டணி - சரத்குமார் பேச்சு



பரமக்குடி : பரமக்குடியில் அகில இந்திய சமத்துவ கட்சி நிறுவன தலைவர் சரத்குமார், அ.தி.மு.க., விற்கு ஆதரவாக பேசியதாவது: மூன்று ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் ஜெ., நிறைவேற்றியுள்ளார். ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து, எப்படித்தான் மக்களை சந்திக்க வருகிறார்களோ?. காங்.,கில் ப.சிதம்பரம், தங்கபாலு, ஜி.கே.வாசன், கார்த்திக் என, பல கூட்டணி உள்ளது. தொண்டர்களே கிடையாது. மற்றொரு சுயநல கூட்டணி. அதில் தே.மு.தி.க., தலைவர் ஒருவர். அவருக்கு என்ன கொள்கை என்றே தெரியவில்லை. ஏனென்றால் அவர் பேசுவது எனக்கு புரியவில்லை. அதனால் அவரைப்பற்றி நான் பேசுவதில்லை. சட்டசபையில் அவர் பேசி, நான் கேட்டதில்லை. அவர் பதவிக்காக மட்டும் உள்ளார். மக்களுக்காக சிந்திக்கவில்லை. அவரது மைத்துனர் சுதீஷ், அமைச்சர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். ராமதா”க்கு, அன்புமணி மந்திரி ஆக வேண்டும். கற்பனை கூட்டணி இது. சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., தலைவர், பா.ம.க., வை, ஒரு ஜாதிக்கட்சி என்றார். அது இந்த தேர்தலுடன் "குளோஸ்' ஆகி விடும், என்றார். இப்போது இருவரும் "குளோஸ்' (நெருங்கி) ஆகிவிட்டனர். இனி இரண்டு கட்சியும் "குளோஸ்' ஆக போகிறது.ஓட்டு போடும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள், என்றார்.

0 comments:

Post a Comment