தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 16, 2014

பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகள் மூடல்
 

கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மூடும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில்  ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் தவறிவிழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவாதல், எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாகா மூட வேண்டும் என அனைத்து உள்ளாட்சி அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இதையடுத்து, சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளி்ல் மூடிஅமைத்து அதன் துவாரங்கள் முற்றிலுமாக அடைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை   ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் பி.மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தார். இதில் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர்  வீ.ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

0 comments:

Post a Comment