புன்செய் புளியம்பட்டியில் வாக்குபதிவு நாளில் பெரும்பாலான கடைகள் அடைப்பு.
புன்செய் புளியம்பட்டியில் பெரும்பாலான
வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக
ஹோட்டல், பேக்கரி, துணிக்கடைகள், செல்போன் கடைகள், நெட் சென்டர்கள், பழ
அங்காடி என பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக எப்போதும்
பிஸியாக இயங்கி வரும் கோவை மெயின் ரோடு, சுல்தான் ரோடு, மாதம் பாளையம் ரோடு
,பஸ் ஸ்டாண்டு பகுதி என அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு
வெறிச்சோடி கிடந்தது. போதாக்குறைக்கு வெயிலின் தாக்கமும் அதிகமாக
இருந்ததால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள ஹோட்டல் கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்ததால் வெளியூரை சேர்ந்த பயணிகள் உணவு கிடைக்காமல் அலைமோதினர். இதன் காரணமாக திறந்திருந்த ஒருசில கையேந்தி பவன்கள், ரோட்டோர கடை களில் கூட கூட்டம் அலைமோதியது. டீக்கடை கள் கூட மூடியிருந்ததால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். ஒரு சில கட்சியினர் தங்களது பூத் ஏஜண்டுகளுக்கு மதியம் பொட்டல சாப்பாடு கூட விநியோகம் செய்ய முடியாத அளவிற்கு கடைகள் இல்லாமல் இருந்தது. தேர்தலில் வாக்களிக்க வசதியாக பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கனவே தேர்தல் ஆணை யம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் தெரிவித்திருந்ததாலேயே பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment