மேட்டுப்பாளையம் நகரில் ஒரே நாளில் 84 இடங்களில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு.
நீ லகிரி நாடாளுமன்ற தொகுதி அண்ணா.தி.மு.க.வேட்பாளர் டாக்டர்.சி.கோபாலகிருஷ்ணன்,நேற் று
மேட்டுப்பாளையம் நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.காலை 7
மணிக்கு ராமசாமி நகரில் துவங்கிய நிகழ்ச்சிக்கு,நீலகிரி தொகுதி தேர்தல்
பொறுப்பாளர் ஏ.கே.செல்வராஜ்.,எம்.பி,தலைமை தாங்கினார்.மேட்டுப்பாளையம் தொ குதி
எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ் முன்னிலை வகித்தார்.நகர செயலாளர் ஏ.வான்மதி
சேட்,வரவேற்று பேசினார்.அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் தனக்கு
,இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பொதுமக்களை கேட்டு சிறப்புரை
ஆற்றினார்.பின்னர் நகரின் 33 வார்டுகளில் சுமார் 84 இடங்களில் மோட்டார்
சைக்கிளில் தொண்டர்கள் அணிவகுத்து சென்று தீவிர வாக்கு
சேகரித்தனர்.தமிழகத்தில் அண்ணா தி.மு.க.ஆட்சியின் சாதனைகளையும்,முதல்வர்
ஜெயலலிதாவின் சிறப்பான திட்டங்களையும் விளக்கி
ஏ.செல்வராஜ்,எம்.பி,ஓ.கே.சின் னராஜ் எம்.எல்.ஏ.ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் பி.ஆர்.சுப்பையன்,அமானுல்லா,எம் .என்.பாலன்,லட்சுமி, விஜயகுமாரி, மற்றும் கே.ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி, கருணா கரன்,, சார்பு அணி நிர்வாகிகள் கே.வெள்ளிங்கிரி,எல்.எஸ்.புரம் ரவி,வேணுகோபால்,மைதானம் சந்தானம், எஸ்.கே.அருண், எம்.ஆர். சண்முகம், தமிழகம் சேட்,நபீஸா, எச்.சுலைமான், பூர் ணவிசுவனாதன், பி.ஆறுமுகம். ஹபிபு ர் ரஹிமான், மாவட்ட பிரதிநிதிகள் ஜெய்சங்கர், செல் வராஜ், மற்றும் எஸ்.ஜோதிமணி,எல். ஐ.சி.ஜெயக்குமார் உட்பட நகரமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment