மழை வேண்டி பண்ணாரி கோவிலில் சிறப்பு யாகம்
மழை வேண்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவிலில் வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கோடை
வெயிலின் தாக்கம் அதிகமானதால் கடும்வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
இதற்கிடையே, இந்து அறநிலையத்துறை சார்பில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மழை
வேண்டி சிறப்பு யாகபூஜை நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரிஅம்மன் கோயில் வளாகத்தில்
திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக பூஜை தொடங்கியது.
சிவாச்சாரியார்கள் மழை வேண்டி பஜனை பாடல்களை பாடினர். வேதவிற்பனர்கள்
நடத்திய இந்த சிறப்பு யாக பூஜையில் இணை ஆணையர் என்.நடராஜன், அறநிலையத்துறை
அலுவலர்கள், கோயில் பரம்பரை அறங்காவலர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள்
திரளாக கலந்து கொண்டனர்.
சித்திரை அமாவாசையையொட்டி, பண்ணாரி
கோவிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. சந்தனகாப்பு
அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட
வரிசையில் நின்று அம்னை தரிசனம் செய்தனர்.
0 comments:
Post a Comment