தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 12, 2014

மேட்டுப்பாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம்.[லோக் அதாலத்]

18 வருட சிவில் வழக்கில் தீர்வு. ரூ.32 லட்சம் தீர்வு. 
ஒரே நாளில் 740 வழக்குகளுக்கு தீர்வு. பொதுமக்கள் மகிழ்ச்சி.



 
மேட்டுப்பாளையம்.ஏப்ரல்.12.மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில்,கிரிமினல்,மற்றும் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம்[லோக் அதாலத்] மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ,வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் பி.செல்லத்துரை தலைமையில் இன்று நடந்தது.சிவில் வழக்குகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், மணிவாசகம், கிரிமினல் வழக்குகளுக்கு வீரபத்திரன், பராந்தகசோழன், ஆகியோர் பங்கேற்றனர்.10 சிவில் வழக்குகளில் தீர்வு ஏற்ப்பட்டு ரூ.10 லட்சம் தொகை முடிவானது..88 கிரிமினல் வழக்குகள்,16 செக் மோசடி வழக்குகளில்  தீர்வு ஏற்பட்டு ரூ.18 லட்சத்து 27 ஆயிரத்து 29 ரூபாய் முடிவானது.402 சிறு வழக்குகள் [பெட்டி கேஸ்] 19 கள்ளச்சாராய வழக்குகள்,மற்றும் 19 மற்ற வழக்குகளில் தீர்வு ஏற்பட்டது.மோட்டார் வாகன வழக்கு,மற்றும் சிறு வழக்குகளில் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. 

1996ஆம் ஆண்டு முதல் 18 ஆண்டுகள் நடந்து வந்த சிவில் வழக்கில் தீர்வு ஏற்பட்டதில் வழக்கில் சம்பந்தப்பட்ட 20 பேர் மகிழ்ச்சியடைந்தனர். மொத்தம் ஒரேநாளில் 740 வழக்குகள் தீர்வு ஏற்பட்டது .பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு நன்றி தெரிவித்தனர்.முடிவில் மேட்டுப்பாளையம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் பாண்டியராஜன் நன்றிகூறினார்.

0 comments:

Post a Comment