பவானிசாகர் அணை நீர்மட்டம் 42 அடி
அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 42 அடியாக சரிந்தது.
ஈரோடு
மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இதன் மூலம்
ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7
ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர் மட்ட
கொள்ளளவு 120 அடி. இதில் 15 அடி சேறும் சகதியுமாக உள்ளது. அணையில் இருந்து
பவானிஆற்றுக்கு 150 கனஅடியும் கால்வாய்க்கு 5 கனஅடி நீரும்
திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 623 கனஅடியாக குறைந்துவிட்டது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. அணையில்
நீர்மட்டம் குறைந்து குட்டைபோல காட்சியளிக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதி
அணையில் தேங்கு நிற்கும் தண்ணீரில் அழுக்கும் பாசியும் நிறைந்து பச்சை
நிறத்தில் காணப்படுகிறது.
0 comments:
Post a Comment