பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவர்களுக்கு சாதனையாளர் விருது
பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக்
கல்லூரியில் வியாழக்கிழமை நடந்த சாதனையாளர் விருது வழங்கும் விழாவிற்கு
கல்லூரி தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்,
இறுதியாண்டு மாணவர்களுக்கு சாதனையாளர் விருதை வழங்கி டிவிஎஸ் நிறுவனத்தின்
முதன்மை ஆலோசகர் ஆர்.சங்கரநாராயணன் பேசியது: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
திறமை உண்டு. அதை நம் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்படுமாறு
அமைத்துக் கொள்ளவேண்டும். எந்தவொரு பணியையும் குழுவாக சேர்ந்து
செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். முடியும் என்ற தத்துவத்தை நோக்கி
நகர்ந்து, தொடர் முயற்சியுடனும், சிறந்த முறையிலும், இலக்கை அடைய வேண்டும்
என்றார்
கல்லூரி ஆலோசகர் டாக்டர் எம்.பி.விஜயக்குமார்
பேசுகையில் தொழில்நுட்ப திறமையை முறையாக கற்று பயிற்சி செய்யவேண்டும்.
நீச்சல் சொல்லிக் கொடுத்து வருவதில்லை, பயிற்சி செய்தால் மட்டுமே வரும்.
அதைப்போல கல்வியை கற்றபின் பயன் பாட்டுடன் பயிற்சியும் வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் 311 பேருக்கு சாதனையாளர் விருத வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment