தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பு.புளியம்பட்டி நகர தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம்.


நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பவானிசாகர் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட   பு.புளியம்பட்டி நகர தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ,மற்றும் ஆலோசனை கூட்டம் திரு.வி.க திடல் அருகில் நடைபெற்றது.
  
இந்நிகழ்ச்சிக்கு, பு.புளியம்பட்டி நகர செயலாளர்எம்.கே.ராஜேந்திரன்
தலைமை தாங்கினர்.மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம்,வரவேற்றார்.பவானிசாகர் ஒன்றியகுழு தலைவர் வி.ஏ.பழனிசாமி,நகராட்சி துணை தலைவர் டி.பாபு,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பவானிசாகர் தொகுதி செயலாலரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான எஸ்.ஆர்.செல்வம்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு   பு.புளியம்பட்டி நகர தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
 
தொடர்ந்து,பு.புளியம்பட்டி நகர தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் 
மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  எஸ்.ஆர்.செல்வம், தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்நடைபெற்றது.இதில் அவர் பேசும்போது;  

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க வேட்பாளர் சி.கோபாலகிருஷ்னனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுவது,முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பது, எனவும் ஒவ்வொரு நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு , முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கரங்களில் வெற்றிக்கனியை கொண்டுசேர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக சார்பு அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அண்ணா தி.மு.க தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment