புன்செய் புளியம்பட்டி நகரபகுதிகளுக்கு உட்பட்ட
கடை மற்றும் வீடுகளில் நகர அண்ணா தி.மு.கவினர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி
அண்ணா தி.மு.க வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு தீவிர வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டனர்.
40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் ஓவ்வொரு அ.தி.மு.க தொண்டனின் லட்சியமாக இருக்க வேண்டும், தமிழகத்தின் மறு எழுச்சிக்கு வழி காண வேண்டும் என்றால் வீடு வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள் எனவும் தமிழக அரசின் நல திட்டங்களையும் மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரியுங்கள் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விடுத்த வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளின் படி புன்செய் புளியம்பட்டி நகர அ.தி.மு.கவினர் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் ஓவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் புன்செய் புளியம்பட்டி நகர பகுதிகளில் அண்ணா தி.மு.க வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஊராட்சி தலைவரும், தொகுதி செயலாளருமான எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் நகர அண்ணா தி.மு.கவினர் வாக்கு சேகரிக்கும் பணியை மாதம்பாளையம் ரோட்டில் துவங்கி சுல்தான் ரோடு, சத்தி மெயின் ரோடு, பழைய பேருந்து நிலைய பகுதி, மார்க்கெட் பகுதி, பூக்கடை பகுதி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அ.தி.மு.க அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீய சக்தி கருணாநிதி காங்கிரஸ் உடன் கைகோர்த்து தமிழக மக்களுக்கு செய்த துரோகங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கழக சார்பு அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அண்ணா தி.மு.க தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் ஓவ்வொரு அ.தி.மு.க தொண்டனின் லட்சியமாக இருக்க வேண்டும், தமிழகத்தின் மறு எழுச்சிக்கு வழி காண வேண்டும் என்றால் வீடு வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள் எனவும் தமிழக அரசின் நல திட்டங்களையும் மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரியுங்கள் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விடுத்த வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளின் படி புன்செய் புளியம்பட்டி நகர அ.தி.மு.கவினர் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் ஓவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் புன்செய் புளியம்பட்டி நகர பகுதிகளில் அண்ணா தி.மு.க வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஊராட்சி தலைவரும், தொகுதி செயலாளருமான எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் நகர அண்ணா தி.மு.கவினர் வாக்கு சேகரிக்கும் பணியை மாதம்பாளையம் ரோட்டில் துவங்கி சுல்தான் ரோடு, சத்தி மெயின் ரோடு, பழைய பேருந்து நிலைய பகுதி, மார்க்கெட் பகுதி, பூக்கடை பகுதி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அ.தி.மு.க அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீய சக்தி கருணாநிதி காங்கிரஸ் உடன் கைகோர்த்து தமிழக மக்களுக்கு செய்த துரோகங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கழக சார்பு அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அண்ணா தி.மு.க தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment