5வது கட்ட தேர்தல்: 12 மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு!
பெங்களூரு/புதுடெல்லி: நாடாளுமன்ற
தேர்தலுக்கான 5வது கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் உள்ள 121
தொகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடந்து
முடிந்தது.
மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும், மாலை 4 மணி அளவில் 72 சதவீதம் வரை வாக்குப் பதிவாகி இருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 20
தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 3 மணி வரை 40 சதவீதம்
வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் 19 தொகுதிகளிலும், உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 11 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒடிசாவில் 3 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
மத்திய பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி வரை 52 சதவீத வாக்குகளும், பீகாரில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மாலை 4 மணி வரை சராசரியாக தலா 47 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த ஜார்கண்டில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் மணிப்பூரில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மணிப்பூரில் 2 மணி வரை 62 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், மதியம் 12 மணி வரை 26 சதவீதமும் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்ட்ராவில் 19 தொகுதிகளிலும், உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 11 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒடிசாவில் 3 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
மத்திய பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி வரை 52 சதவீத வாக்குகளும், பீகாரில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மாலை 4 மணி வரை சராசரியாக தலா 47 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த ஜார்கண்டில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் மணிப்பூரில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மணிப்பூரில் 2 மணி வரை 62 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், மதியம் 12 மணி வரை 26 சதவீதமும் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment