பவானிசாகர் அருகே காட்டுயானைகளால் வாழைகள் நாசம்
பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்தில் யானைகள் புகுந்து அங்கு குலைதள்ளிய நிலையில் இருந்த வாழைகளை நாசப்படுத்தின.
பவானிசாகர் அருகே கோடேபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்
விவசாயி ரங்கசாமி. இவர் தோட்டத்தில் 500 ஜி9 ரக வாழைகள் பயிரிட்டுள்ளார்.
இவரது தோட்டம் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் யானை,
காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டத்தில் புகாதபடி மின்வேலி
அமைத்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அங்கு வந்த 2 யானைகள்
மின்வேலியை சேதப்படுத்திவிட்டு வாழைத்தோட்டத்தில் நுழைந்து குலைதள்ளிய
நிலையில் இருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின.
இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்
பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தங்கள் காட்டியும் யானைகளை வனப்பகுதிக்கு
விரட்டியடித்தனர். யானைகள் துவம்சம் செய்ததில் 100 க்கும் மேற்பட்ட
வாழைகள் சேதமடைந்தன. அங்கு வந்த வனத்துறையினர் வாழைகளின் சேதமதிப்பை
கணக்கிட்டனர்.
0 comments:
Post a Comment