சில்லறை வர்த்தக கடைகளில் துணிப்பை பயன்பாடு: சத்தி நகராட்சி ஆய்வு
சில்லறை வர்த்தக கடைகளில் துணி்ப்பை பயன்பாட்டை சத்தியமங்கலம் நகராட்சி சுகாதார அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் ஒரு முறை
பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிப்பதற்கு சத்தி நகராட்சி
நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சத்தியில் உள்ள வணிகர்களை
அழைத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விரிவாக
எடுத்துக்கூறப்பட்டது. இது தொடர்பாக மேலும் ஒரு வணிகர்கள் விழிப்புணர்வு
கூட்டமும் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து, சத்தி பகுதியில் சில்லறை
வர்த்தகத்திற்கு துணிப்பையை பயன்படுத்துவதாக வணிகர்கள் உறுதியளித்தனர்.
இதற்கிடையில், சத்தி வடக்குப்பேட்டை, திப்புசுல்தான்
சாலை, பெரிய பள்ளிவாசல் வீதி, கடைவீதி, கோட்டுவீராம்பாளையம் ஆகிய இடங்களில்
உள்ள மளிகை, இறைச்சிக் கடைகள், உணவகங்களில் சத்தி நகராட்சி ஆணையாளர்
கே.சரவணக்குமார், சுகாதார அலுவலர் கே.சக்திவேல், சுகாதார ஆய்வாளர்
மாரிச்சாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.வியாபாரிகள்
துணைப்பையை தொடர்ந்து உபயோகிக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக
துணிப்பை பயன்படுத்துவதால் சுகாதாரகேடு தவிர்க்கப்படுவதுடன் கழிவுகள்
எளிதாக மட்கி குப்பையாகும் என்றும் ஊட்டியை போனறு பிளாஸ்டிக் இல்லாத
நகர்ப்பகுதியாக சத்தி நகராட்சி மாறும் என்றார் சத்தி சத்தி நகராட்சி
ஆணையாளர் கே.சரவணக்குமார்
0 comments:
Post a Comment