சத்தியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
அம்பேத்கர்
பிறந்தநாளையொட்டி சத்தியில் திங்கள்கிழமை நடந்த விழாவில் அருந்ததியர்
இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆதித்தமிழர் விடுதலை முன்னணி சத்தி கிளை சார்பில் சத்தியமங்கலம்
பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை
கொண்டாடப்பட்டது. தாலுக்கா செயலாளர் எஸ்.முத்துகுமார், மாவட்ட செயலாளர்
சண்முகம் ஆகியோர் தலைமையில் கட்சி தொண்டர்கள் அம்பேத்கர் உருவப்படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அருந்ததியர்களுக்கு
வழங்கப்படும் 3% இட ஒதுக்கீட்டை 6%ஆக உயர்த்தவும் மனிதர் மலத்தை மனிதர்களே
அள்ளும் கொடுமையை முழுமையாக நீக்கவும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களில்
சட்டமேதை அம்பேத்கர் உருவப்படத்தை வைக்க வேண்டும் எனவும் கூட்டத்தில்
உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
0 comments:
Post a Comment