மேட்டுப்பாளையம் ஜெயின் சங்கம் சார்பில் பகவான் மஹாவீரரின் 2613 ஜன்ம மஹோற்சவம் ,அஹிம்சை தின ஊர்வலம்.
மேட்டுப்பாளையம்
ஜெயின் சங்கம் சார்பில் பகவான் மஹாவீரரின் 2613 ஜன்ம மஹோற்சவம் ,அஹிம்சை
தின ஊர்வலம் நடைபெற்றது,இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.மேட்டுப்பாளையம்
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் துவங்கிய அஹிம்சை ஊர்வலத்திற்கு மேட்டுப்பாளையம்
ஜெயின் சங்க தலைவர் நிகால் சந்த் பாண்டியா தலைமை தாங்கினார்.சுரேஷ் சந்த்
நஹார் ,மிட்டாலால் துகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரிமா சங்க முன்னாள்
மாவட்ட ஆளுநர் பி.நவ்ரதன்மல் சாங்க்லா ஊர்வலத்தை கொடியசைத்து
துவக்கிவைத்தார்.ஊர்வலத்தில் பகவான் மஹாவீரரின் மும்மணிகள்
நற்காட்சி,நல்ஞானம்,நல்லொழுக்கம்,கொல்லாதீர் உயிர்களை கொள்ளாதீர்,ஜெனம்,ஜெயந்தி,சாசனம்
ஆகிய கருத்துக்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி மாணவ மாணவிகள்,ஜெயின்
சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர்.ஊர்வலம் ஊட்டி மெயின் ரோடு வழியாக அக்ரஹாரம்
ஜெயின் கோவிலை அடைந்தது.அங்கு பகவான் மகாவீரருக்கு சிறப்பு பூஜைகள்
நடந்தது.பின்னர் ஜெயின் பவனில் பிரார்த்தனை,குழந்தைகளின் கலை நிகழ்சிகள்
நடந்தது.முடிவில் மஹாவீர் சந்த் சாங்க்லா நன்றி கூறினார்
0 comments:
Post a Comment