சத்தி ஸ்ரீ சர்தாள சிக்கம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஸ்ரீ சர்தாள சிக்கம்மாள் திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ சர்தாள சிக்கம்மாள் திருக்கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கர்ப்பகிரஹம்,அர்த்தமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கோபுர திருப்பங்கள் அமைக்கப்பட்டன.
இக் கோவில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை கணபதி ஹோத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, பவானி நதியில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை எடுத்துவருதல், 7 மணிக்கு முதற்கால வேள்வி பூஜை மற்றும் 8 மணிக்கு சுவாமிக்கு அஷ்ட கிரியை செய்து எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து விமான கோபுரம் மற்றும் சர்தாள சிக்கமாளுக்கு மஹா கும்பாபிஷேம் நடைபெற்றது. வெள்ளியங்கிரி சிவாச்சாரியார் தலைமையிலான வேத விற்பனர்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி விழாவை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment